உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தின் ஜவுன்சார்–பவர் பகுதியில் உள்ள கிராம மக்கள், தங்கம் அணிய தடை விதித்துள்ளனர். கடந்த சில மாதங்ளாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் திருமண நிகழ்வுகளில் பெண்கள் மாங்கல்யம், மூக்குத்தி, காதணி ஆகிய மூன்று ஆபரணங்களையே அணிய அனுமதி என்றும், விதியை மீறினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கிராம பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.