Air India Crash | பாடம் கற்பித்த விமான விபத்து - நாடு முழுக்க புதிய விதிகள் அமல்
ஏர் இந்தியா விமான விபத்து.. இந்தியா முழுவதும் புதிய விதிகள் அமல்
விமான நிலையங்களுக்கு அருகே விதிகளுக்கு புறம்பாக உள்ள கட்டமைப்புகளை அகற்றுவதற்கான புதிய வரைவு விதியை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த வரைவு விதிகள் அரசிதழில் வந்த பின் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்படும் என விமான இயக்குநரகம் தெரிவித்துள்ளது. முன்னதாக அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் மருத்துவக் கல்லூரியின் விடுதி கட்டிடம் மீது மோதி கீழே விழுந்து தீயில் கருகிய நிலையில்,
விமான நிலைய மண்டலங்களில் நிர்ணயிக்கப்பட்ட உயர வரம்புகளை மீறும் கட்டிடங்கள், மரங்கள் அல்லது பிற பொருட்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.