வேர்க்கடலை பயிரிட சென்ற சிறுவன் துடிதுடித்து பலி - ஆபத்தான நிலையில் இன்னொரு உயிர்

Update: 2025-07-25 03:25 GMT

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே, வேர்க்கடலை பயிரிடும் போது டிராக்டர் கவிழ்ந்ததில் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். பீஞ்சமந்தை மலைக்கிராமத்தில் சாமிநாதன் என்பவரின் நிலத்தில் வேர்க்கடலை பயிரிட சென்ற மணி என்பவர், டிராக்டரில் சாமிநாதனின் மகன் சிவாவையும் அழைத்துச் சென்றார். டிராக்டர் வரப்பை கடந்தபோது, தலைகுப்புற கவிழ்ந்ததில், சிறுவனும் ஓட்டுநரும் அடியில் சிக்கி காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிறுவன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். ஓட்டுநர் மணிகண்டன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்