திருடிய நகைப்பை உடன் ஜெட் வேகத்தில் பறந்த இளைஞர்கள்.. அடுத்த நொடி நடந்த விபரீதம்... வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

Update: 2023-03-08 11:04 GMT

வேலூரில் நகைப்பையை பறித்துக் கொண்டு தப்பிய இளைஞர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் தொரப்பாடியை சேர்ந்த லோகேஷ் என்பவர் சுமார் 15 சவரன் நகைகளை வங்கியில் அடமானம் வைப்பதற்காக எடுத்துச் சென்றார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென லோகேஷ் வைத்திருந்த நகைப்பையை பறித்துச் சென்றனர். அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கிய போதிலும் வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு இருவரும் தப்பிய நிலையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்