"முதல்முறையாக மது அருந்திய இளைஞர் பலி" - அதிர்ந்த நண்பர்கள்..! சோகத்தில் முடிந்த கொண்டாட்டம் -

Update: 2023-01-01 12:04 GMT

புத்தாண்டிற்காக ஏற்காடு சென்ற இளைஞர், நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் இருந்தபோது, மூச்சுத்திணறி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

சேலம் மல்லூர் வேங்காம்பட்டியை சேர்ந்த சந்தோஷ் என்பவர், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நண்பர்களுடன் ஏற்காடு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர், மதுபோதையில் நண்பர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடியுள்ளார். அப்போது, திடீரென சந்தோஷிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட அவர், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், முதல்முறையாக சந்தோஷ் மது அருந்தியதில், ஒவ்வாமை காரணமாக மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்