குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருப்பதன் பின்னணி என்ன? | TNPSC Exam | Group 2

Update: 2022-10-27 15:47 GMT

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5500 அலுவலர் நிலையில் ஆன பணியிடங்களை நிரப்ப , கடந்த மே மாதம் 21 ஆம் தேதி போட்டி தேர்வு நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்த தேர்வில் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் பங்கேற்றனர் . தேர்வு முடிந்து 6 மாதங்கள் முடிய உள்ள நிலையில், இது வரை முதல் கட்ட தேர்வு முடிவுகள் வெளியாகாமல் உள்ளது. விடைத்தாள்கள் தண்ணீரில் நனைந்து விட்டதால் , கணினி வழியாக மதிப்பீடு செய்ய இயலவில்லை என்றும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இயந்திரங்கள் பழுது ஏற்பட்டிருப்பதால் உடனடியாக அந்தப் பணிகள் முடியவில்லை என்றும், பல காரணங்கள் கூறப்படுகிறது. தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்