"100 சதவீதம் ஆங்கில வழி கல்வி வேண்டும்" - பள்ளி முன் பெற்றோர்கள் போராட்டம்

Update: 2023-06-16 02:27 GMT

ஈரோட்டில், அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 100 சதவீதம் ஆங்கில வழிக் கல்வியை பயிற்றுவிக்க கோரி, பெற்றோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்லபாஷா வீதி பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில், 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டில், 50 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே ஆங்கில வழி பயிற்றுவிக்க, மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை வந்துள்ளதாக, மாணவர்களிடம் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்க வேண்டுமென கோரி, பெற்றோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்