காதலனை விஷம் வைத்து கொன்ற காதலியின் வீட்டை அடித்து உடைத்த ஊர் மக்கள்

Update: 2022-11-01 07:35 GMT

காதலனை விஷம் வைத்து கொன்ற காதலியின் வீட்டை அடித்து உடைத்த ஊர் மக்கள்

கேரளாவில், கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொன்ற சம்பவத்தில், கைதான காதலியின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை, ஊர் மக்கள் கல் எறிந்து தாக்குதல் நடத்தினர்.

தமிழக கேரளா எல்லையான பாறசால பகுதியை சேர்ந்த சரோன் ராஜ் என்ற இளைஞர், தனது காதலி கிரீஷ்மாவால் விஷம் குடுத்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கிரீஷ்மாவின் செயலைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் அவரது வீட்டின் கண்ணாடிகளை கல் எறிந்து தாக்கினர். இதனிடையே, தனது சகோதரனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கிரீஷ்மாவிற்கு மரணதண்டனை அளிக்க வேண்டும் என அவரது சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்