தினத்தந்தி சார்பில் "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சி - நூற்றுக்கணக்கில் குவிந்த +2 மாணவர்கள்

Update: 2023-04-30 11:49 GMT

தினத்தந்தி மற்றும் இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி இன்று திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்திரா கணேசன் கல்லூரியில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் துவக்கி வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாறினார். இந்த நிகழ்ச்சியில் தினத்தந்தி நாளிதழ் தலைமை பொது மேலாளர் தனஞ்செயன், தினத்தந்தி நாளிதழ் திருச்சி மேலாளர் சிவசுப்ரமணியன், இந்திரா கணேசன் கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர் பாலா கிருஷ்ணன், செயலர் ராஜாசேகரன் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்