தறிகெட்டு ஓடிய வாகனம்...மாணவர்களுக்கு எமனான லாரி..கல்லூரி முடியம் நேரத்தில் வாழ்க்கை முடிந்த சோகம்

Update: 2023-05-31 03:05 GMT

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த கேத்தி பகுதியில் சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறுதி ஆண்டு மாணவர்களான ரித்விக் சேவியர் மற்றும் ரிக்சன் ஆகியோர் கல்லூரி முடிந்து குன்னூர் - கேத்தி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த லாரியில் மோதி விபத்தி சிக்கியது. இதில், மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர், தகவலறிந்து வந்து உடல்களை மீட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்