சக மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த மாணவனின் உடல் நல்லடக்கம் - கதறி அழுத பெற்றோர் - காண்போரை கலங்க செய்த காட்சி

Update: 2023-03-11 14:25 GMT

திருச்சி மாவட்டத்தில் சக மாணவர்கள் தாக்கியதால் உயிரிழந்த அரசுப்பள்ளி மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. முசிறி அருகே தொட்டியம் பகுதியில் செயல்பட்டு வந்த அரசுப்பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதால் 10 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்ட மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கண்ணீர் மல்க உறவினர்களின் மத்தியில் மாணவனின் உடலை பெற்றோர் அடக்கம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்