Night Shift முடித்து வந்தவரை மிரட்டி G Pay மூலம் ரூ.50,500 திருடிய திருநங்கைகள் - சென்னையின் முக்கிய சாலையில் அதிர்ச்சி

Update: 2023-05-01 07:53 GMT

சென்னை, பள்ளிக்கரணையில் சாலையில் சென்றவரை மிரட்டி கூகுள் பே மூலமாக 50 ஆயிரத்து 500 ரூபாயை திருடிய திருநங்கைகளை போலீசார் தேடி வருகின்றனர். மடிப்பாக்கம் சேதுபதி நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் இரவு பணி முடிந்து பள்ளிக்கரணை அருகே சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, ராமமூர்த்தியை வழிமறித்த திருநங்கைகள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதில், ராமமூர்த்தியின் செல்போனை பறித்த அவர்கள், கூகுள் பே மூலம் 50 ஆயிரத்து 500 ரூபாயை திருடி தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தி வரும் போலீசார் திருநங்கைகளை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்