"எப்படி சொல்லுவாரு அப்படி?" - "உடனே அவரை Transfer பண்ணுங்க.."

Update: 2023-05-11 14:27 GMT

கோவில்பட்டி வருவாய் உட்கோட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் ஆதார் அட்டை வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கணினியில் பதிவேற்றும் செய்ய கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகளை சரிவர முடிக்கவில்லை என்றும் கோப்புகளில் கையெழுத்திட மாட்டேன் என சில தாலுகா அலுவலகங்கள் மோசமாக செயல்படுவதாகவும் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி ஆடியோவில் கூறியதாகவும் தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பாக 150 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்