இன்றைய தலைப்பு செய்திகள் (31-05-2023)

Update: 2023-05-31 14:17 GMT

சென்னையில், மதுபோதையில் வாகனம் ஓட்டி விதி மீறிய வழக்குகள்...சுமார் 13 கோடியே 42 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளதாக தகவல்...

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு...

சுரானா குழுமத்தின் 124 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கம்...

டெல்லி இந்தியா கேட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு... சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்ததன் எதிரொலி....

"புதுக்கோட்டையில் பல் மருத்துவக் கல்லூரி - அனுமதி"... புதுக்கோட்டையில் 50 மாணவர் சேர்க்கையுடன் பல் மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி...

செங்கோல் - அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு... விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு காணாமல் செங்கோல் வைக்கிறது மத்திய அரசு...

உலகின் மிகப்பெரிய உணவு தானிய சேமிப்பு திட்டம்...மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்...

"ஒரே தேர்வு, ஒரே நாளில் உயர்கல்வி சேர்க்கை"... முதுகலை படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம் என்ற முறை அறிமுகம்...

ஜல்லிக்கட்டுக்கு பாராட்டு - டெல்டா மாவட்டங்களில் ஆய்வு... டெல்டா மாவட்டங்களில், தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம்...

Tags:    

மேலும் செய்திகள்