முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கு நன்றி தெரிவித்த திமுக எம்பி கனிமொழி |

Update: 2022-12-03 08:49 GMT

கோவில்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள கி.ரா நினைவரங்கத்தில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராவின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவரங்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி கட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இந்த நினைவரங்கத்தில் கலை இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கனிமொழி எம்பி, கட்சி பேதமின்றி இந்நிகழ்வில் கலந்து கொண்ட கடம்பூர் ராஜுவிற்கு நன்றி தெரிவித்தார்.

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு பேசுகையில், கி.ராவின் நினைவாக நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாகக் கூறினார்.

நிகழ்வில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்