பாஜக அமைச்சர் மீது மை வீச்சு | Chandrakant Patil | Maharashtra

Update: 2022-12-11 03:33 GMT

மகராஷ்டிராவில் சட்டமேதை அம்பேத்கர், சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் பூலே ஆகியோர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் மீது மை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்பேத்கரும், ஜோதிராவ் பூலேவும் பிச்சை எடுத்துதான் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார்கள் என்று நிகழ்ச்சி ஒன்றில் சந்திரகாந்த் பாட்டீல் கூறியது சர்ச்சையானது. இந்நிலையில், புணே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி நகரில், அவர் மீது ஒருவர் மையை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனிருந்த காவலர்கள் அவரைப் பிடித்துக் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்