ஆடு மேய்க்க சென்றவர்களை தாக்கிய இடி..மறுநாள் வயலில் கிடந்த உடல்கள்-கையிலிருந்த தூக்குச்சட்டி காரணமா?

Update: 2023-05-21 08:56 GMT

விருதுநகர் மாவட்டம் புல்லா நாயக்கன்பட்டியில் இடி தாக்கி இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருமாள், விஜய் ஆகிய 2 இளைஞர்களும் சகோதரர்கள் முறை என்று கூறப்படுகிறது. இவ்விருவரும் ஆடு மேய்ப்பதற்காக இராணி சேதுபுரம் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து திடீரென பெரும் இடி விழுந்துள்ளது. பெருமாள் மற்றும் விஜய் ஆகிய இருவரும் இடிதாக்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்