நடுரோட்டில் ரத்த காயத்துடன் கிடந்த ஆசிரியை...கலெக்டர் செய்த அந்த உதவி - நெகிழ்ந்த பொதுமக்கள்

Update: 2022-12-15 02:09 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்த பள்ளி தலைமை ஆசிரியையை மாவட்ட ஆட்சியர் தமது காரில், மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

விஜயலட்சுமி என்ற ஆசிரியை, தமது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் கீழே விழுந்து உடலில் காயமடைந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், காரை நிறுத்தி காயம் அடைந்த பள்ளி ஆசிரியையை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் தனது ஆய்வு பணிக்கு புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்