கடப்பாரை, மண்வெட்டியுடன் யாகசாலையை இடிக்க சென்ற திராவிடர் விடுதலை கழகத்தினர் - ஈரோட்டில் பரபரப்பு

Update: 2022-12-02 04:08 GMT

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையை திராவிடர் விடுதலை கழகத்தினர் அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வலம்புரி விநாயகர் கோயிலில், வரும் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

இதற்காக, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டிருப்பதற்கு திராவிடர் விடுதலை கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து இடிப்பதற்காக சென்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்