"நாடு வல்லரசு ஆகவில்லை.. அதானிதான் வல்லரசர் ஆகி இருக்கிறார்.." - திருமாவளவன் விமர்சனம்

Update: 2023-04-10 02:00 GMT

அதானி என்ற தனி நபர் மட்டும் வல்லரசர் ஆகி இருக்கிறார் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பாக, சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மண்டபத்தில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், எம்எல்ஏக்கள் ஹசன் மௌலானா, ஆளூர் ஷா நவாஸ் மற்றும் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், பாஜக தலைமையிலான ஆட்சியில் நாடு வல்லரசு ஆகவில்லை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்