புழுதி பறக்க சைக்கிளோடு மல்லுக்கட்டிய காளை! - பரபரப்பு காட்சி

Update: 2022-10-27 03:06 GMT

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் காளை ஒன்றின் கழுத்தில் சைக்கிள் சிக்கியதால் பெரும் சிரமத்தில் ஆழ்ந்தது. டவுகி காவல்நிலையம் அருகே ஒருவர் தமது சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். அப்போது

சைக்கிளில் இருந்த காய்கறியை காளை சாப்பிட ஆரம்பித்தது. இதனால், காளையின் கழுத்து சைக்கிளில் சிக்கி கொண்டது. இதையடுத்து சிலர் காளையின் கழுத்தில் இருந்த சைக்கிளை வெளியே எடுத்தனர். சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ பரவி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்