உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணி - போராட்டக்காரர்கள்-போலீஸார் இடையே வாக்குவாதம்

Update: 2022-12-12 16:52 GMT

தரங்கம்பாடி அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு வைத்திருப்பவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல், 4 வழிச் சாலை அமைக்கும் பணிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் முதல் நாகை வரை 180 கிலோ மீட்டருக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே வெள்ளகுளம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்திருப்பவர்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. உரிய நிவாரணம் வழங்காமல் நிலத்தை கையகப்படுத்த அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்