கல்லூரி விடுதியில் மலைப்பாம்பு... அலறியடித்து ஓட்டம் பிடித்த மாணவர்கள்

Update: 2023-06-24 08:32 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் புகுந்த மலை பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் தங்கும் விடுதியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதனால், கதிகலங்கிய மாணவர்கள், விடுதியில் இருந்து ஓட்டம் பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் வேளிமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சாமர்த்தியமாக மலைப்பாம்பை பிடித்தனர்..

Tags:    

மேலும் செய்திகள்