தனுஷ்கோடிக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வருகை..அகதிகளிடம் மரைன் போலீசார் விசாரணை

Update: 2023-04-28 15:38 GMT

இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக, தமிழகத்தில் அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் படகு மூலம், 5ம் மணல் திட்டு பகுதியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, 7 பேரையும் மீட்ட கடலோர காவல் படையினர், அவர்களை மரைன் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், அவர்களிடம் மரைன் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்