மழையால் கோளாறான சிக்னல்... ஆங்காங்கே நின்ற மின்சார ரயில்கள் - திக்குமுக்காடிய ரயில் பயணிகள்

Update: 2023-03-20 13:52 GMT

இருப்புப் பாதை சிக்னல் பழுது காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளூர் அரக்கோணம் மார்க்கத்தில் இன்று காலையில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

மழை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில்களை இயக்க தாமதமாக தெரிவிக்கப்பட்டது.

சென்னை சென்ட்ரலில் இருந்து புறநகர் பகுதி வழியாக திருவள்ளூர் செல்லக்கூடிய ரயில்கள் மற்றும் அரக்கோணம் செல்லக்கூடிய ரயில்கள் அனைத்தும் 5 முதல் 10 நிமிட இடைவெளியில் தாமதமாக இயக்கப்பட்டன.

இதனால், மாணவர்கள், பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்