நாட்டை உலுக்கிய ஷ்ரத்தா கொலை - காதலனுக்கு நடக்க போகும் ஷாக் ட்ரீட்மெண்ட்

Update: 2022-12-01 09:16 GMT

டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில் காதலன் பாலிகிராஃப் சோதனையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், உண்மை கண்டறியும் சோதனையான நார்கோ சோதனைக்கு அஃப்தாப்பை போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில் காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காதலன் அஃப்தாப் அமீனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திகார் சிறையில் உள்ள அஃப்தாப்பை அழைத்து சென்று போலீசார் மேற்கொண்ட பாலிகிராஃப் சோதனையில் அஃப்தாப் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், உண்மை கண்டறியும் சோதனையான நார்கோ சோதனையையும் மேற்கொள்ள அஃப்தாப்பை போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்