மனநலம் பாதிக்கப்பட்ட பக்தரை தீட்சிதர்கள் தாக்கிய விவகாரம் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

Update: 2023-06-25 02:24 GMT

சிதம்பரம் நடராஜர் கோயிலில், மனநலம் பாதிக்கப்பட்ட பக்தரை தீட்சிதர்கள் தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த கார்வண்ணன் என்ற மனநலம் பாதிக்கப்பட்டவர், கடந்த 22ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றார். அப்போது, கனகசபாபதி, ஸ்ரீ வர்ஷன் ஆகிய தீட்சிதர்கள், கார்வண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கன்னத்தில் தாக்கினர். இது தொடர்பாக, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிதம்பரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தீட்சிதர்கள் தாக்கியது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்