பித்து பிடித்தது போல் ஒரே இடத்தில் 12 நாட்கள் வட்டமிட்ட செம்மறி ஆடுகள் - ஏலியன்ஸ்களின் சதி.. கதிகலங்கும் மக்கள்

Update: 2022-11-19 06:11 GMT

சீனாவின் மங்கோலியா நகரில் செம்மறி ஆட்டு கூட்டமொன்று இடைவிடாமல் கடந்த 12 நாட்களாக ஒரு இடத்தில் வட்டமிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனை ஏலியன்ஸின் வேலை என்றும்... அமானுஷ்யம் என்றும் பலரும் கூறி வரும் வேளையில், ஆடுகளின் மூளையை பாதிக்கும் Listeriosis என்ற பாக்டீரியல் நோய் தான் இதற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மூளையின் ஒரு பகுதியை பாக்டீரியா தாக்கும் போது, ஆடுகள் இது போல் ஒரே இடத்தில் இடைவிடாமல் வட்டமிடும் என்கின்றனர்.

இந்த அறிகுறி தென்பட்ட இரண்டு நாட்களுக்குள் ஆடுகள் உயிரிழக்க கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்