சீரம் நிறுவன சிஇஓ போட்டோவை வாட்ஸ்அப்-ல் வைத்து மோசடி -1 கோடி ரூபாய் அபேஸ் | Serum Institute

Update: 2022-11-26 05:06 GMT

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா சிஇஓ ஆதார் பூனாவாலாவின் படத்தை பயன்படுத்தி, ஒரு கோடி ரூபாயை, பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றியதற்காக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், பூனாவாலாவின் படத்தை வாட்ஸ் அப் கணக்கில் பயன்படுத்தியதாகவும், பணப் பரிமாற்றம் குறித்த செய்திகளை நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சதீஷ் தேஷ்பாண்டேவுக்கு அனுப்பியதாகவும் காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். 7 பேர் பல்வேறு மாநிலங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்