சகல வசதியுடன் கூடிய சமத்துவபுரம் - இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சகல வசதியுடன் கூடிய சமத்துவபுரம் - இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Update: 2022-06-08 01:55 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். கோட்டை வேங்கைபட்டியில் 100 வீடுகள், அங்கன்வாடி மையம், நியாயவிலைக்கடை, பூங்கா உள்ளிட்டவை என சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் சகல வசதியுடன் கூடிய சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே பணிகள் நிறைவு பெற்ற நிலையில், ஆட்சி மாற்றத்தின் காரணமாக பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மீண்டும் புதுப்பிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், இன்று பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். இதனிடையே, முதலமைச்சரின் வருகையையொட்டி விழா ஏற்பாடுகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.https://www.youtube.com/watch?v=horY4JUU3ME

Tags:    

மேலும் செய்திகள்