கார்த்திகை மாதம் சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. வெளியான புது தகவல்

Update: 2022-11-06 07:25 GMT

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெருவழிப்பாதை வழியாக நடை பயணமாக வரும் பக்தர்களின் வசதிக்காக புதிய ஆன்லைன் செயலி உருவாக்கப்படும் என, கேரள அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் தெரிவித்தார். ஐயப்ப பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து, அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் பம்பையில் ஆலோசனை நடத்தினார். அப்போது, பக்தர்களின் வசதிக்காக புதிய ஆன்லைன் செயலி உருவாக்கப்படும் எனவும், இதன்மூலம் விலங்குகள் நடமாட்டம், மருத்துவ வசதிகள், தங்குமிடம் உள்ளிட்டவை குறித்து தெரிந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்