சபரிமலை பக்தர்களுக்காக கேரள உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2022-12-04 04:36 GMT

சபரிமலை பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பம்பை, நிலக்கல் வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளில் சபரிமலை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு, பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்