கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4ஆம் அணு உலையின் தலைவராக, கிளினின் கோ வடின் என்ற ரஷ்ய விஞ்ஞானி பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை தூதரகம் மூலமாக ரஷ்யா கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.