ரூ.20,000 சம்பளம் அரசு கல்லூரிகளில் வேலை!

Update: 2023-06-22 11:12 GMT

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் 5 ஆயிரத்து 699 பேரை நியமிக்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இப்பணிகள் நடைபெறுவதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், கௌரவ விரிவுரையாளர்கள் 5,699 பேரை நியமிக்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இவர்கள் 11 மாதங்களுக்கு பணியாற்றுவார்கள் என்றும், மாதம் 20 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்