ஊருக்குள் இறங்கிய 'டவுசர்' கொள்ளையர்கள்.. கண்டுகொள்ளாத போலீஸ்.. உருட்டு கட்டைகளுடன் களமிறங்கிய மக்கள் - வெளியான பரபரப்பு வீடியோ

Update: 2023-06-22 02:45 GMT

மதுரை மாவட்டம் கோவில் பாப்பாக்குடி பகுதியில், இரவு நேரங்களில் கொள்ளையர்கள் நடமாடுவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீடுகளை நோட்டமிட்டு, அடையாளம் தெரியாத நபர்கள், கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய அப்பகுதி மக்கள், வீட்டுக்கு ஒருவர் வீதம், உருட்டு கட்டைகளுடன் நள்ளிரவில் ரோந்து செல்கின்றனர். இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்