மழை நீரால் மூழ்கிய மாற்றுப்பாதை - மிதந்து செல்லும் வாகனங்கள்

Update: 2023-07-13 10:25 GMT

திருக்கோவிலூர் அருகே மாற்றுப்பாதையில் மழை நீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் கானை பகுதியில், சிறிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக பிரதான சாலையை ஒட்டி, விவசாய நிலத்தில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கனமழையின் காரணமாக, மாற்றுப் பாதை நீரில் மூழ்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்