மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம்..12000 மரக்கன்றுகளை நட்ட ஊராட்சி - மக்கள் விடுத்த கோரிக்கை

Update: 2023-05-19 14:18 GMT

விக்கிரவாண்டி அருகே ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில், நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்க சொட்டு நீர் பாசன வசதி அமைத்து தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்குணம் கிராமத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 12 ஏக்கர் நிலத்தில், ஊராட்சி நிர்வாகம் 12 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளது. இதை பராமரிக்க 80 அடி ஆழ கிணற்றில் இறங்கி நீர் எடுக்கும் நிலை உள்ளதால், சொட்டு நீர் பாசன வசதி அமைத்து தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்