12 பேரை காவு வாங்கிய தண்டவாளம்..தேங்கிய மழை நீரால் நேர்ந்த அவலம்

Update: 2023-07-26 03:26 GMT

சேலத்தில் பள்ளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தினமும் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து சாகச பயணம் செய்து வருகின்றனர். சேலம் பெரியகொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் வெளியேற வழியில்லாததால் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கிவிடுகிறது. இதனால்10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர். இதுவரை 12 பேர் ரெயிலில் சிக்கி பலியாகி உள்ளனர். எனவே மழைநீர் தேங்காமல் இருக்க பள்ளமான கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்