பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 162-வது நாளாக தொடரும் போராட்டம்

Update: 2023-01-05 05:53 GMT

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து,162-வது நாளாக கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கி பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து 162-வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் கருப்புக்கொடி ஏந்தி கணடன கோஷங்களை எழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல்

முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்