இந்திய கர்ப்பிணி பெண்ணின் மரணத்தால் போர்ச்சுக்கல் நாட்டு அமைச்சர் திடீர் ராஜினாமா - என்ன காரணம்?

Update: 2022-09-02 03:42 GMT

போர்ச்சுகலுக்கு சென்ற இந்திய கர்ப்பிணி பெண், மரணமடைந்ததையடுத்து, அந்நாட்டு சுகாதார அமைச்சர் மார்ட்டா டெமிடோ தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்தியாவைச் சேர்ந்த 34 வயதான கர்ப்பிணிக்கு அங்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் லிஸ்பனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு படுக்கை வசதி இல்லாததால் பின் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த ஐந்து மணி நேரத்தில் போர்ச்சுகல் நாட்டின் சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்