சிறுவன் உயிரை காவு வாங்கிய அங்கன்வாடி பள்ளம்.."எல்லாத்துக்கும் அதுதான் காரணம்" - கொதிக்கும் பெற்றோர்

Update: 2022-11-29 09:50 GMT

பெரம்பலூர் அருகே 3 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், அங்கன்வாடி மைய கட்டிடத்தை சுற்றி முள்வேலி அமைக்காதது தான் இறப்பிற்கு காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் மாவிலங்கை கிராமத்தில் 3 வயது சிறுவனான ரோகித் சர்மா என்பவர் கால் தவறி அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்துள்ளார். சிறுவனை மீட்ட அக்கம்பக்கத்தினர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், அங்கன்வாடிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், பாதுகாப்பிற்காக முள்வேலி அமைக்கப்படாதது தான் உயிரிழப்பிற்கு காரணம் என சிறுவனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இச் சம்பவம் குறித்து களத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்