"ரூ.2 கோடியே 50 லட்சத்திற்கு பதிலாக ரூ. 40000 செலுத்தினால் போதும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு

Update: 2022-08-12 17:22 GMT

"ரூ.2 கோடியே 50 லட்சத்திற்கு பதிலாக ரூ. 40000 செலுத்தினால் போதும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு


கோவை ஈஷா யோகா மையம், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு பதிலாக, 40 ஆயிரம் செலுத்தினால் போதும் என்ற தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஈஷா மையத்திற்குள் 500 உட்கட்டமைப்பு இணைப்புகளை பயன்படுத்தியதில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 2017 ல் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து ஈஷா யோக மையம் வழக்கு தொடர்ந்தது. இதன் மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஈஷா யோகா மையம் 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும் என்ற இசைவு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்