செஸ் ஒலிம்பியாட்டை கலக்கிய பாலஸ்தீன சிறுமி!! செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்!

Update: 2022-08-10 02:53 GMT

செஸ் ஒலிம்பியாட்டில் பலரை வியக்க வைத்த 8 வயது சிறுமி ராண்டா சேடருடன் புகைப்படம் எடுத்து ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

மிக குறைந்த வயதில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் கலந்துகொண்ட ராண்டா சேடரை அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

மேலும், முன்னணி வீரர்களுக்கு எதிராக களமிறங்கி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தார்.

இந்த நிலையில் போட்டியின் நிறைவு நாளில் செஸ் போர்டுகளை வாங்குவதற்காக அங்குள்ள விற்பனை மையத்திற்கு வந்த சிறுமியுடன் புகைப்படம் எடுத்தும், ஆட்டோகிராஃப் வாங்கியும் ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்