குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000...பொருளாதார நிபுணர்களுடன் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை

Update: 2022-11-24 04:03 GMT

குடும்ப தலைவிக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், போலிச் செய்திகளை பரப்பும் சக்திகள் எப்போதும் சமூக நீதி‌ இலக்கில் இருந்து நம்மை திசைத்திருப்பாது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்