"78% மட்டுமே குப்பைகள் தரம் பிரித்து வழங்குகிறார்கள்" - மேயர் பிரியா பேச்சு

Update: 2022-09-03 14:39 GMT

சென் னையில் 78 சதவீத மக்கள் மட்டுமே குப்பைகளை தரம்பிரித்து கொடுப்பதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற விழாவில், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்பு நல சங்கங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சிறப்பாக பணியாற்றிய 130க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கிய மேயர் பிரியா, பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்