'மனைவியின் நகைகளை விற்று...' - ஆன்லைன் ரம்மியால் நேர்ந்த சோகம்

Update: 2023-02-08 07:44 GMT

கேரளா மாநிலம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்.

திருச்சூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வந்த இவர், தொடர்ச்சியாக ஆன்லைன் ரம்மி விளையாடி அதிகப்படியான பணத்தை இழந்துள்ளார்.

இந்நிலையில், இழந்த பணத்தை மீட்க தனது மனைவியின் நகைகளை விற்று விளையாடியதில், சுமார் மூன்றரை லட்சம் வரை இழந்ததாக கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சலில் இருந்த க்ரிஷ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்