சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தொடர் மின்வெட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் காலில் விழுந்து, மின்வாரிய செயற்பொறியாளர் சமாதானப்படுத்தினார். காரைக்குடியில் கடந்த வாரம் பெய்த மழையினால், மின் வெட்டு நிலவி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், மின் வாரிய அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டக்காரர்கள் காலில் விழுந்து செயற்பொறியாளர் லதா சமாதானப்படுத்தினார்.