திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு.. அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை

Update: 2023-06-22 08:14 GMT

    திருப்பத்தூர் மாவட்டம் கனகாமேடு பகுதியில், திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தனி நபரிடம் தலா 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து நிலம் வாங்கியதாக கூறி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த இடங்களை திருநங்கைகளுக்காக அரசு வழங்கியதாக கூறிய அதிகாரிகள், போலீசாரின் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்