பதற்றம் இல்லாமல் பைக்கை திருடி சென்ற மர்ம நபர்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி கட்சிகள்

Update: 2023-05-07 03:22 GMT

புதுச்சேரியில் சிசிடிவியில் சிக்கிய இருசக்க வாகன கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். வழக்கறிஞரான செந்தில் குமார் என்பவர், நேரு வீதியில் உள்ள உணவகத்தில் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். பின்னர், திரும்பி வந்து பார்க்கையில் தனது இருசக்கர வாகனம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக, வழக்குபதிந்த போலீசார் கொள்ளையனுக்கு வலைவீசி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்