போக்குவரத்துதொழிலாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் கே.என்.நேரு

Update: 2023-05-31 07:34 GMT

திமுக ஆட்சியில் இன்னும் ஆறுமாதத்தில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய பணபலன்கள் வழங்கப்படும் என்று, அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சேலம் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, பண பலன் வழங்கும் நிகழ்ச்சி, ஜான்சன்பேட்டை பகுதியில் உள்ள அரசு பணிமனையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் நேரு, திமுக, அதிமுக என்ற கட்சி வேறுபாடு இன்றி, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியவர் மறைந்த தலைவர் கருணாநிதி என்று நினைவு கூர்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்